என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகள், இளைஞர்கள் முன்வரவேண்டும் - ராகுல் காந்தி
Byமாலை மலர்9 Jan 2019 2:42 PM GMT (Updated: 9 Jan 2019 2:42 PM GMT)
பிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் ஆட்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது முன்னால் வந்து ஆடுவது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு களத்தில் முன்னால் வந்து ஆடி சிக்சர் அடிக்க வேண்டும்.
விவசாயிகளும், இளைஞர்களும் எந்தவித பயமுமின்றி முன்வர வேண்டும். களத்தில் அவர்கள் முன்னால் வந்து ஆடவேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி தடுப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடி வந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் விவசாயிகள் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதன்மூலம் உலகுக்கு நமது பலத்தையும் வெளிப்படுத்தி உள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 தினங்களில் செய்துகாட்டி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X