search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை- அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு
    X

    அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை- அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

    சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் மீதான சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து மாநிலங்களவையில் அம்மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.


    கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காததால் அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
    Next Story
    ×