என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா கூட்டணி 300 தொகுதியை கைப்பற்றும்- அமித்ஷா நம்பிக்கை
Byமாலை மலர்6 Jan 2019 10:41 AM GMT (Updated: 6 Jan 2019 10:41 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #amitshah #bjp #parliamentelection
அகர்தலா:
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்தவித சவாலும் இல்லை. நாங்கள் 300 இடங்களில் எளிதில் வெற்றி பெறுவோம்.
மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 50 இடங்கள் வரை கைப்பற்றுவோம்.
அனைத்து மாநில பா.ஜனதா தலைமையிடம் கருத்து அறிந்த பிறகு அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
ராமர் கோவில் விவகாரத்தில் சட்டப்படி முடிவு மேற்கொள்ளப்படும். காங்கிரசின் மெகா கூட்டணியால் மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்க போவதில்லை.
இந்த தேர்தலில் வளர்ச்சி, பாதுகாப்பு, நாட்டின் சுயமரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 282 இடங்களை கைப்பற்றி இருந்தது. #amitshah #bjp #parliamentelection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X