search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் புயல் நிவாரண பணிகளை தொடரலாம் - தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
    X

    திருவாரூரில் புயல் நிவாரண பணிகளை தொடரலாம் - தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

    திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் என தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #ThiruvarurByElection #GajaCyclone #ECI #TNGovernment
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கின.

    இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடருவதற்கு தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், திருவாருரில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

    நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #CycloneGaja #ECI #TNGovernment
    Next Story
    ×