என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி பதவி ஏற்றார்
Byமாலை மலர்1 Jan 2019 6:29 AM GMT (Updated: 1 Jan 2019 6:29 AM GMT)
தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார். #ThottathilBhaskaranNairRadhakrishnan
ஐதராபாத்:
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.
முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.
மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.
மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை கடந்த 26-ம் தேதியன்று வெளியிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்கும் இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர் நீதிமன்றமாகும். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 நீதிபதிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.
இதைதொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் இன்று முதல் தெலுங்கானா உயர் நீதிமன்றம் என்று மட்டுமே அழைக்கப்படும்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.
ஐதராபாத் நகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற எளிய விழாவில் தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணனுக்கு அம்மாநில கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர், தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. #FirstChiefJustice #TelanganaHighCourt #ChiefJusticeswornin #ThottathilBhaskaranNairRadhakrishnan
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.
முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.
மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.
மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை கடந்த 26-ம் தேதியன்று வெளியிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்கும் இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர் நீதிமன்றமாகும். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 நீதிபதிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.
இதைதொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் இன்று முதல் தெலுங்கானா உயர் நீதிமன்றம் என்று மட்டுமே அழைக்கப்படும்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.
ஐதராபாத் நகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற எளிய விழாவில் தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணனுக்கு அம்மாநில கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர், தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. #FirstChiefJustice #TelanganaHighCourt #ChiefJusticeswornin #ThottathilBhaskaranNairRadhakrishnan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X