search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி - திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
    X

    உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி - திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

    திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது.

    உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்து மேயர் மற்றும் தலைமைப் பொறுப்புகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது. 
     
    இந்த வெற்றியை தொடர்ந்து, திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் தேபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த திரிபுரா மக்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என பதிவிட்டுள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
    Next Story
    ×