search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் - ஒடிசா சட்டசபையில் நிறைவேற்றம்
    X

    விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் - ஒடிசா சட்டசபையில் நிறைவேற்றம்

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியா திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஒடிசா மாநில சட்டசபையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காலியா திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தினால் ஒடிசாவில் உள்ள 32 லட்சம் விவசாயிகளில் 92 சதவீதம் பேர் பலனடைவார்கள். விவசாயிகளின் வறுமையைப் போக்கும் விதமாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    காலியா திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது மட்டுமின்றி நிலமற்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெறமுடியும் என தெரிவித்தார். #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    Next Story
    ×