என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு
Byமாலை மலர்19 Dec 2018 4:18 AM GMT (Updated: 19 Dec 2018 4:18 AM GMT)
சபரிமலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் 144 தடை உத்தரவு வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #Section144
திருவனந்தபுரம்:
பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு சில தினங்களே உள்ள நிலையில் சபரிமலையில் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. #Sabarimala #Section144
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஆனால், சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளிலேயே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன்பின்னர் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதன் காரணமாக 144 தடை உத்தரவு வரும் 22ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு சில தினங்களே உள்ள நிலையில் சபரிமலையில் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. #Sabarimala #Section144
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X