என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத்தில் எதிரொலித்த சீக்கிய கலவர தீர்ப்பு- அவை நடவடிக்கைகள் பாதிப்பு
Byமாலை மலர்18 Dec 2018 6:52 AM GMT (Updated: 18 Dec 2018 6:52 AM GMT)
பாராளுமன்றத்தில் சீக்கிய கலவர தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாததால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.
இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது, காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சியினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாததால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது மக்களவையில் ரபேல் வழக்கின் தீர்ப்பு, சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது, காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சியினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X