என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேச முதல்வராக கமல் நாத் பதவியேற்பு: மம்தா பானர்ஜி, மாயாவதிக்கு காங்கிரஸ் அழைப்பு
Byமாலை மலர்16 Dec 2018 7:18 AM GMT (Updated: 16 Dec 2018 7:19 AM GMT)
மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல் நாத் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மம்தா மற்றும் மாயாவதிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. #kamalNath
போபால்:
மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச முதல்- மந்திரியாக கமல்நாத் நாளை (17-ந்தேதி) பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கும் கமல்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் முக்கிய தொழில் அதிபர்கள், மத துறவிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். எம்பி-யாக இருக்கும் கமல் நாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக வேண்டும்.
சிந்துவாரா மாவட்டத்தில் உள்ள சவுன்சர் தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 20,742 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி என்பதால் இங்கு கமல்நாத் போட்டியிடுகிறார்.
மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச முதல்- மந்திரியாக கமல்நாத் நாளை (17-ந்தேதி) பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கும் கமல்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் முக்கிய தொழில் அதிபர்கள், மத துறவிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். எம்பி-யாக இருக்கும் கமல் நாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக வேண்டும்.
சிந்துவாரா மாவட்டத்தில் உள்ள சவுன்சர் தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 20,742 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி என்பதால் இங்கு கமல்நாத் போட்டியிடுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X