search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை
    X

    குஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை

    குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel
    ஆமதாபாத்:

    இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தின் நர்மதை ஆற்றங்கரையோரம் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் உலகிலேயே உயரமான இந்த சிலையை கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



    இந்தநிலையில் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒற்றுமையின் சிலையின் மாதிரியான சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel

    Next Story
    ×