என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி- மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Byமாலை மலர்13 Dec 2018 9:14 AM GMT (Updated: 13 Dec 2018 9:14 AM GMT)
காவிரி விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LokSabhaAdjourned
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் துவக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது.
இதேபோல் ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் முதலில் 20 நிமிடங்களும், பின்னர் மதியம் வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LokSabhaAdjourned
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் துவக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது.
மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், 2001ல் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல் ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் முதலில் 20 நிமிடங்களும், பின்னர் மதியம் வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LokSabhaAdjourned
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X