search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுவிட்டார் - வீரப்ப மொய்லி புகழாரம்
    X

    அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுவிட்டார் - வீரப்ப மொய்லி புகழாரம்

    ராகுல் காந்தி, அனைத்து தலைமைத்துவ தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார். #AssemblyPollResults #RahulGandhi #VeerappaMoily
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறுகையில், ‘பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தை மக்கள் நீண்டகாலமாக பொறுத்து வந்தனர். ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவினர் தாக்கி பேசியதை மக்களால் பொறுக்க முடியவில்லை. பிரதமர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியையே இந்த வெற்றி காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.



    இந்த வெற்றி காங்கிரசின் வெற்றி மட்டுமின்றி அதன் தலைமைக்கும் கிடைத்த வெற்றியாகும் எனக்கூறிய வீரப்ப மொய்லி, இதன் மூலம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி நாட்டின் தலைவராக அதாவது பிரதமராக உருவெடுப்பார் எனவும் கூறினார். ராகுல் காந்தி, அனைத்து தலைமைத்துவ தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். #AssemblyPollResults #RahulGandhi #VeerappaMoily
    Next Story
    ×