search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வெற்றி எதிரொலி- காங்கிரஸ் அணியில் மாயாவதி இணைகிறார்
    X

    தேர்தல் வெற்றி எதிரொலி- காங்கிரஸ் அணியில் மாயாவதி இணைகிறார்

    தேர்தல் வெற்றி எதிரொலியால் காங்கிரஸ் அணியில் மாயாவதி இணைகிறார். இதனால் அந்த கட்சிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். #mayawati #congressparty #electionvictory

    லக்னோ:

    5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆகிய மூன்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதாவிடம் இருந்து அந்த கட்சி ஆட்சியை பறித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த அமோக வெற்றியால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மனமாற்றம் அடைந்துள்ளார்.

    5 மாநில தேர்தலில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். டெல்லியில் நடந்த எதிர்க் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள வில்லை.

    சத்தீஷ்கரில் அஜித்ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்து மாயாவதி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தில் 2 இடங்களிலும், ராஜஸ்தானில் 6 தொகுதியிலும், தெலுங்கானாவில் 1 இடத்திலும் பகுஜன் சமாஜ்கட்சி வெற்றி பெற்றது.

    சத்தீஷ்கர், ராஜஸ்தானில் மாயாவதியால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இதனால் காங்கிரசின் இந்த வெற்றியை அவர் பெரிதாக கருதுகிறார். இதனால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக மாயாவதி இன்று அறிவித்தார். ராஜஸ்தானிலும் தேவை ஏற்பட்டால் ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்தார்.

    இதன் மூலம் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதில் உறுதி ஏற்பட்டுள்ளது. மாயாவதிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கு இருப்பதால் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உருவாக்கும் அணியில் கூடுதல் பலமாக அமையும் எள்பதில் சந்தேகமில்லை.


    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள கட்சியாகும். ஆனால் அவர் டெல்லியில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அகிலேஷ் யாதவும் அறிவித்துள்ளார்.

    இதனால் பாராளு மன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பா.ஜனதாவை எதிர்க்கும்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் மாயாவதியும், அகிலேசும் இணைந்து பா.ஜனதாவை ஏற்கனவே வீழ்த்தி இருந்தனர். 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று இணைக்கும் பணியில் ராகுல் காந்தி, சந்திர பாபு நாயுடு ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த அணியில் பல கட்சிகள் இருக்கும் நிலையில் மாயாவதியும், அகிலேஷ்யாதவும் இணைய இருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். #mayawati #congressparty #electionvictory

    Next Story
    ×