search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.பி., சத்தீஸ்கரில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு
    X

    ம.பி., சத்தீஸ்கரில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு

    மத்திய பிரதேசத்தில் ஏ.கே.அந்தோனி மற்றும் சத்தீஸ்கரில் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
    புதுடெல்லி:

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் வெற்றியை நெருங்கி வருகிறது.

    தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ஏ.கே.அந்தோனியையும், சத்தீஸ்கரில் மேலிட பார்வையாளராக மல்லிகார்ஜுன் கார்கேயையும் நியமனம் செய்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
    Next Story
    ×