search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் உயிரிழப்பு
    X

    காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் உயிரிழப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று 3 போலீசாரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். #policemenshotdead #Shopianpolicemen
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த எதிர்பாராத தாக்குதலில் அப்துல் மஜித், மன்சூர் அஹமத், முஹம்மது அமின் ஆகிய 3 போலீசார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

    பலத்த காயங்களுடன் மேலும் ஒரு போலீஸ்காரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் அள்ளிச் சென்றனர்.
    #policemenshotdead  #Shopianpolicemen
    Next Story
    ×