search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா விவகாரம் : எல்லா பெருமையும் பிரதமர் மோடியை சேரும் - அமித்ஷா சொல்கிறார்
    X

    விஜய் மல்லையா விவகாரம் : எல்லா பெருமையும் பிரதமர் மோடியை சேரும் - அமித்ஷா சொல்கிறார்

    விஜய் மல்லையா விவகாரத்தில் எல்லா பெருமையும் பிரதமர் மோடியை சேரும் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். #VijayMallya #NarendraModi #AmitShah
    புதுடெல்லி:

    தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்த தீர்ப்பு ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும் அம்சமாக அமைந்து உள்ளது. இதன் அத்தனை பெருமையும் பிரதமர் மோடியையே சேரும்.

    அவருடைய நடவடிக்கையால்தான் இந்திய வங்கிகளை ஏமாற்றிய ஒரு தொழில் அதிபரை விசாரணை முகமைகள் இடைவிடாமல் தேடுதல் வேட்டை நடத்தி அதில் வெற்றியையும் உறுதி செய்துள்ளன. இதன் மூலம் ஊழலுக்கும், ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடி கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #VijayMallya #NarendraModi #AmitShah
    Next Story
    ×