search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம் பயிரிட செலவு ரூ.2 லட்சம், வருமானம் 6 ரூபாய்- வெறுத்துப்போய் முதல்வருக்கு அனுப்பிய விவசாயி
    X

    வெங்காயம் பயிரிட செலவு ரூ.2 லட்சம், வருமானம் 6 ரூபாய்- வெறுத்துப்போய் முதல்வருக்கு அனுப்பிய விவசாயி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து வெங்காயம் பயிட்ட விவசாயிக்கு வெறும் 6 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்ததால், வெறுத்துப்போன அவர் அந்த பணத்தை முதல்வருக்கு அனுப்பினார். #MaharashtraFarmer #FallingOnionPrices
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயத்தை சும்மா கொடுத்தால் கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலைதான் மராட்டியத்தில் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக நாசிக் மற்றும் அகமத் நகர் மாவட்டங்களில் வெங்காயத்தை பயிரிட்ட விவசாயிகள் கடும் இழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    அகமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சிரேயாஸ் அப்கலே என்பவர் தனது வயலில் பயிரிட்டிருந்த 3 ஆயிரம் கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய கொண்டு சென்று இருந்தார். சங்கம்நர் மொத்த விற்பனை சந்தையில் அவர் வெங்காயத்தை விற்க கடை அமைத்திருந்தார்.

    ஆனால் யாரும் வெங்காயத்தை விலைக்கு வாங்க முன்வரவில்லை. 2 நாட்கள் காத்திருந்தும் ஒரு வெங்காயம் கூட விற்கவில்லை.

    நேற்று அவரது 2657 கிலோ வெங்காயத்தை ஒருவர் வாங்க முன் வந்தார். ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்று விற்கப்பட்டது.

    2657 கிலோ வெங்காயமும் ரூ.2,916-க்கு விற்பனையாகி இருந்தது. இதையடுத்து வெங்காயம் கொண்டு வர, விற்க உதவிய தொழிலாளர்களுக்கு உரிய சம்பள பணத்தை கொடுத்தார்.

    தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்த வகையில் ரூ.2,910 செலவாகி விட்டது. இதனால் சிரேயாஸ் கையில் வெறும் 6 ரூபாய்தான் மிஞ்சியது.

    வெங்காயம் பயிரிட அவர் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்தார். ஆனால் கிடைத்த வருவாயோ வெறும் 6 ரூபாய்.


    6 ரூபாயுடன் வீடு திரும்பிய சிரேயாஸ் வெங்காய விலை வீழ்ச்சியால் மிகவும் வேதனை அடைந்தார். 6 ரூபாய் லாபத்தையும் வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

    உடனடியாக அவர் அந்த 6 ரூபாயை மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிசுக்கு அனுப்பி வைத்து விட்டார். #MaharashtraFarmer #FallingOnionPrices
    Next Story
    ×