search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் காரணமாக ஸ்ரீநகரில் இன்டர்நெட் சேவை தற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. #jammuandkashmir #3terroristskilled

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் முஜ்குந்த் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.


    அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக ஸ்ரீநகரில் இன்டர்நெட் சேவை தற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டது. #jammuandkashmir #3terroristskilled 

    Next Story
    ×