search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
    X

    டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு வருமாறு சோனியா காந்தியை நேரில் சந்தித்து முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல் மந்திரி பிணராயி விஜயன், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழா அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார்.

    அதன் பிறகு சோனியா காந்தியிடம் சிறிது நேரம் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேகதாது பிரச்சினை நாளை நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்தும் விவாதித்தனர்.

    சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்தித்தபோது கனிமொழி எம்பி, டிஆர் பாலு, ஆர் ராசா ஆகியோரும் உடனிருந்தனர். சோனியா காந்தியை தொடர்ந்து ராகுல் காந்திக்கும் அழைப்பிதழை வழங்கினார்.
    Next Story
    ×