search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்தார் - பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு
    X

    மத்திய மந்திரி நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்தார் - பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

    மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய மந்திரி நிதின் கட்காரி மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். #NitinGadkari
    அகமத்நகர்:

    மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் இன்று மகாத்மா புலே வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரி  தனது பேச்சை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இருக்கையில் இருந்து எழுந்த கட்காரி, திடீரென மயங்கி சரிந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார்.



    பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கட்காரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி திடீரென மயங்கி விழுந்ததால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #NitinGadkari

    Next Story
    ×