என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி கேரள அரசு மனு
Byமாலை மலர்3 Dec 2018 10:42 PM GMT (Updated: 3 Dec 2018 10:42 PM GMT)
சபரிமலை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaHighCourt #SupremeCourt
புதுடெல்லி:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சபரிமலை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை விசாரித்து வரும் ஐகோர்ட்டு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்களுடன் விசாரிக்கும் வகையில், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaGovernment #SupremeCourt
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சபரிமலை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை விசாரித்து வரும் ஐகோர்ட்டு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்களுடன் விசாரிக்கும் வகையில், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaGovernment #SupremeCourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X