search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நில ஒதுக்கீட்டில் ஊழல் - அரியானா முன்னாள் முதல் மந்திரி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    நில ஒதுக்கீட்டில் ஊழல் - அரியானா முன்னாள் முதல் மந்திரி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

    அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா நில ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி பூபிந்த சிங் ஹூடா, மோதிலால் வோரா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. #Panchkulaplot #BhupinderSinghHooda
    சண்டிகர்:

    அரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் 3,360 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளருக்கு முறைகேடாக ஒதுக்கி பணப்பலன் அடைந்ததாக அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி பூப்பிந்தர் சிங் ஹூடா மற்றும் சில அதிகாரிகள் மீது பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


    இந்நிலையில், இதுதொடர்பாக  முன்னாள் முதல் மந்திரி பூப்பிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மற்றும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டர் என்னும் பத்திரிகை நிறுவத்தின்மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Panchkulaplot #CBI #CBIchargesheet #formerHaryanaCM #BhupinderSinghHooda  
    Next Story
    ×