என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரட்டை இலை சின்னம் வழக்கு- விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்30 Nov 2018 11:33 PM GMT (Updated: 30 Nov 2018 11:33 PM GMT)
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது. #TwoLeaves #DelhiHighCourt
புதுடெல்லி:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர்பாண்டி, அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் விஸ்வநாதன், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையாளர் பகுதியில் ஆஜராகி இருந்தார். இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #TwoLeaves #DelhiHighCourt
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர்பாண்டி, அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் விஸ்வநாதன், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையாளர் பகுதியில் ஆஜராகி இருந்தார். இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #TwoLeaves #DelhiHighCourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X