என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தராமையா வந்தால் பா.ஜனதாவில் சோ்த்து கொள்வோம்: ஈசுவரப்பா
Byமாலை மலர்30 Nov 2018 2:07 AM GMT (Updated: 30 Nov 2018 2:07 AM GMT)
சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் தெரிவித்துள்ளார். #Eshwarappa #Siddaramaiah
பெங்களூரு :
பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்கள் கட்சிக்கு சித்தராமையா வருவதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம். சித்தராமையா அவ்வப்போது தனது பேச்சை மாற்றிக்கொள்கிறார். முன்பு, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று அவர் சொன்னார். அந்த முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.
முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று சொன்னார். சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறுகிறார்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
ஆர்.அசோக் எம்.எல்.ஏ. கூறுகையில், “சித்தராமையா பா.ஜனதாவுக்கு வருகிறாரா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. கடும் எதிரிகளாக இருந்த சித்தராமையாவும், தேவேகவுடாவும் ஒன்று சேர வில்லையா?” என்றார். #Eshwarappa #Siddaramaiah
பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்கள் கட்சிக்கு சித்தராமையா வருவதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம். சித்தராமையா அவ்வப்போது தனது பேச்சை மாற்றிக்கொள்கிறார். முன்பு, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று அவர் சொன்னார். அந்த முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.
முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று சொன்னார். சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறுகிறார்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
ஆர்.அசோக் எம்.எல்.ஏ. கூறுகையில், “சித்தராமையா பா.ஜனதாவுக்கு வருகிறாரா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. கடும் எதிரிகளாக இருந்த சித்தராமையாவும், தேவேகவுடாவும் ஒன்று சேர வில்லையா?” என்றார். #Eshwarappa #Siddaramaiah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X