search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 வாரம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 வாரம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

    மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1 வாரம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NEETExam #SC
    புதுடெல்லி:

    புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30-ந்தேதி (நாளை) கடைசி நாளாகும். தற்போது கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இந்த மாட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.



    பல்வேறு குக்கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. கிராமங்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் பல சேதம் அடைந்துள்ளன.

    இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தை நீட்டித்து தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தொலைபேசி மூலமும் பேசி உள்ளோம்.

    அதற்கு மத்திய அரசு அதிகாரிகள் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக வாய்மொழி உத்தரவு தந்துள்ளனர். விரைவில் மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NEETExam #SC
    Next Story
    ×