search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அழைப்பு நிராகரிப்பு - சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது
    X

    பாகிஸ்தான் அழைப்பு நிராகரிப்பு - சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார். #Saarc #Pakistan #Modi #Indiaboycotts #SAARCsummit
    புதுடெல்லி:

    சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் நேற்று தெரிவித்திருந்தார்.
     
    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் அழைப்பை நாங்கள் ஏற்கப்போவதில்லை. நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப்போல் இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகளை பாகிஸ்தான் நிறுத்தும்வரை அந்நாட்டுடன் எந்தப் பேச்சுக்கும் இடமில்லை. எனவே, பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.



    இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த அமைப்பில் பங்கேற்றுள்ள வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் கடந்த சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். #Saarc #Pakistan #Modi #Indiaboycotts #SAARCsummit 
    Next Story
    ×