search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் சீக்கிய கோவிலுக்கு செல்லும் புதிய பாதை -  துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்
    X

    பாகிஸ்தானில் சீக்கிய கோவிலுக்கு செல்லும் புதிய பாதை - துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்

    பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் புதிய பாதைக்கான பணியின் துவக்க விழாவுக்கு பஞ்சாப் மாநிலத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அடிக்கல் நாட்டினார். #KartarpurSahibcorridor #Sikhtemple
    சண்டிகர்:

    சீக்கிய மதத்தவர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் மிக பிரமாண்டமான பொற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் குர்த்துவாரா என்றழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளன.

    அவ்வகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், ஷக்கார்கர் அருகேயுள்ள கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவரவுக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப்பின் குருதாஸ்பூர் இருந்து பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைவரை தனிவழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 



    இதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லை வரை சீக்கிய ஆன்மிகப் பயணிகளுக்கு தனிவழி அமைக்கும் சாலை பணிகளுக்கு  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, விஜய் சம்பாலா, பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பாதையை அமைக்கும் பணிகளை இன்னும் 4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதேபோல், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இந்த பாதையை இணைக்கும் சாலைக்கான பணியை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் வரும் 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.  #KartarpurSahibcorridor #Sikhtemple
    Next Story
    ×