search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜினாமா செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு
    X

    ராஜினாமா செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகிய செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 113 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  கட்சியில் இருந்து  செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி நேற்று ராஜினாமா செய்தார்.

    அவரை தொடர்ந்து மேலும் சில எம்.பி.க்கள் விலகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விலகிய கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.



    அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டாரா? அல்லது, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi  

    Next Story
    ×