என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஷ்கரில் 2-வது கட்ட தேர்தல்- 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
Byமாலை மலர்19 Nov 2018 8:28 AM GMT (Updated: 19 Nov 2018 8:28 AM GMT)
90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. #Chhattisgarh #AssemblyElections
ராய்ப்பூர்:
90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதல் - மந்திரி ராம்நாத்சிங் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதே போல காங்கிரஸ் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.
நாளை வாக்குபதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் தாம்தரி, சரியாபாத் ஸ்பூர், பில்ராம்பூர், மக சம்ண்ட், தபிர்தம் ஆகிய மாவட்டங்கள் நக்சலைட்டுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.
இதேபோல முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி- மாயாவதி கூட்டணியும் களத்தில் இருக்கிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. #Chhattisgarh #AssemblyElections
90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் சுமார் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
2-வது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குபதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
நாளை வாக்குபதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் தாம்தரி, சரியாபாத் ஸ்பூர், பில்ராம்பூர், மக சம்ண்ட், தபிர்தம் ஆகிய மாவட்டங்கள் நக்சலைட்டுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.
இதேபோல முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி- மாயாவதி கூட்டணியும் களத்தில் இருக்கிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. #Chhattisgarh #AssemblyElections
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X