search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்தானா வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம் - உச்ச நீதிமன்றத்தை நாடினார்
    X

    அஸ்தானா வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம் - உச்ச நீதிமன்றத்தை நாடினார்

    சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
    புதுடெல்லி:

    இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய ஐதராபாத் தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான மணிஷ் குமார் சின்கா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு திடீரென மாற்றப்பட்டார்.



    இந்த இடமாற்ற உத்தரவை எதிர்த்து மணிஷ் குமார் சின்கா இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் முறையிட்டார்.

    கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தனது மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என சின்கா கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, சின்காவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana
    Next Story
    ×