search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை - பிரதமர் மோடி
    X

    தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை - பிரதமர் மோடி

    சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் சென்ற வாரம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. 

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசமுந்த் என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி இருந்தபோது, அவரது 5 ஆண்டு பதவிக்காலத்தை அக்கட்சி நிறைவு பெற விடவில்லை. அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. சோனியா புதிய தலைவராக வேண்டும் என்பதற்காகவும், அவர் தலித் என்பதற்காகவும் சீதாராம் கேசரி பாதியிலேயே தூக்கி வீசப்பட்டார்.



    கடந்த சில பத்தாண்டுகளாக டெல்லியில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடைபெற்றது. இந்த ரிமோட் ஒரு குடும்பத்தின் கைகளில் இருந்தது. அவர்களுக்கு பாஜக மீது பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேராத திறமை வாய்ந்த ஒருவரை கட்சி தலைவராக காங்கிரஸ் நியமிக்க முடியுமா.

    காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை ஆட்சி செய்ததை எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவர்கள் ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்தித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் கிடைப்பதை பற்றி சிந்திக்கவில்லை. இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்.

    சத்தீஸ்கரின் வளர்ச்சிக்காக ராமன் சிங் ஏராளமாக உழைத்து வருகிறார். மாநிலம் வலுப்பெற வேண்டும் என்றால், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
    Next Story
    ×