search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியை கொல்ல சதி - எழுத்தாளர் வரவரராவ் கைது
    X

    பிரதமர் மோடியை கொல்ல சதி - எழுத்தாளர் வரவரராவ் கைது

    பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவை போலீசார் கைது செய்தனர். #PMModi #VaravaraRaoArrest

    ஐதராபாத்:

    பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடந்த சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஐதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் ஆகிய 5 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.

    எழுத்தாளர் வரவரராவை கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி முதல் ஐதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யகோரி வரவரராவ் புனே கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த புனே கோர்ட்டு அதை தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து புனேயில் இருந்து போலீசார் ஐதராபாத்தில் உள்ள வரவரராவ் வீட்டுக்கு நேற்று இரவு சென்றனர். அங்கு வீட்டு காவலில் இருந்த வரவரராவை கைது செய்தனர்.

    பின்னர் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு அவரை நள்ளிரவு ஐதராபாத்தில் இருந்து புனேவுக்கு அழைத்து சென்றனர்.

    இன்று புனேவில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். #PMModi #VaravaraRaoArrest

    Next Story
    ×