search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
    X

    காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:


    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜைனாப்போரா பகுதியை அடுத்துள்ள ரெப்பான் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 



    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட சோபியான் மாவட்டத்தை சேர்ந்த நவாஸ் வாகேய், மற்றவர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த யாவார் வானி இருவருமே அல்-பதர் என்னும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Twomilitantskilled #JKencounter
    Next Story
    ×