search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி அனந்த குமார் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
    X

    மத்திய மந்திரி அனந்த குமார் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல் சாமராஜபேட்டையில் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    பெங்களூரு:

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடல் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அனந்த குமார் உடல் முப்படை விரர்கள் புடைசூழ மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     
    அங்கு அவரது உடலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்துக்கான பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், மத்திய மந்திரி சதானந்த கவுடா, அசோகா, ஈஸ்வரப்பா, அனுராக் தாகூர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனந்த குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 



    இதையடுத்து தேசிய கல்லூரி மைதானத்திற்கு அனந்த குமார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் அனந்த குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, பிராமண முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சாமராஜபேட்டில் மதியம் 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. #AnanthKumar #RIPAnanthKumar #KarnatakaBJP
    Next Story
    ×