search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் ஒரே நாளில் 12 பேர் ரெயில்களில் அடிபட்டு உயிரிழப்பு
    X

    மும்பையில் ஒரே நாளில் 12 பேர் ரெயில்களில் அடிபட்டு உயிரிழப்பு

    மும்பையில் ரெயில் தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் ரெயில்களில் அடிபட்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    மும்பை:

    ரெயில்வே கிராசிங்கை கடக்கும்போது கவனமாக கடந்து செல்ல வேண்டும், ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தியபோதிலும் பயணிகளின் கவனக்குறைவால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    தண்டவாளத்தை கடந்தபோதும், அதிக கூட்ட நெரிசலின்போது ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர்.



    தானே மாவட்டம் மற்றும் கல்யாண் நகரில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை வடாலா பகுதியில் 2 பேரும், குர்லா, மத்திய மும்பை, பாந்த்ரா, டோம்பிவிலி பகுதியில் தலா ஒருவரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக அரசு ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் ரெயில்களில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு ரெயில்வே காவல்துறை பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    Next Story
    ×