search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
    X

    ரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. #Rafaledeal #Rafaledealdocument
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய விமானப் படைக்கு ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
     
    இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு பெரிய அளவில் பலன் இருப்பதாகவும் காங்கிரஸ் வெளிப்படையாக விமர்சித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனவல்லா மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனுவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதால் அதற்கு தடை விதிக்குமாறும், மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


    இதேபோல், ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் மத்திய அரசு கடைபிடித்த அணுகுமுறை, பேரம் பேசப்பட்ட விபரங்கள் போன்ற ஆவணங்களை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் மனோகர் லால் சர்மா, வினீத் தான்டா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதே கோரிக்கையுடன் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், மத்திய முன்னாள் மந்திரி யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோரும் கூட்டாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால், ரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பான விவகாரங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசியம் என்பதால் இதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த முடியாது என மத்திய அரசு மறுத்து விட்டது.

    இவ்வழக்கு கடந்த 31-10-2018 அன்று விசாரணைக்கு வந்தபோது  ரபேல் போர் விமானம் கொள்முதலில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து இன்னும் 10 நாட்களில் மனுதாரர்களிடம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கிணங்க அந்த விபரங்கள் மனுதாரர்களிடம் இன்று வழங்கப்பட்டது.
    #Rafaledeal ##Rafaledealdocument  
    Next Story
    ×