search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவூல சாவிகளை பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார் மோடி - பிரச்சாரக் களத்தில் ராகுல் தாக்கு
    X

    கருவூல சாவிகளை பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார் மோடி - பிரச்சாரக் களத்தில் ராகுல் தாக்கு

    நாட்டின் கருவூல சாவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பணக்காரர்களிடம் மோடி கொடுத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #ChhattisgarhElections #Rahul #Modi
    சராமா:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் தலைவர்கள் உச்சகட்டபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், சராமா பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    கடந்த நான்கைந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி, 15 பணக்காரர்களுக்கு ரூ.3.5 கோடி வழங்கி உள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது, அந்த தொகையைவிட 10 மடங்கு அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழிலதிபர்களுக்கு அவர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.



    கருவூலத்தின் சாவிகளை 15 தேர்ந்தெடுக்கப்பட்ட பணக்காரர்களுக்கு மோடி வழங்கி உள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ சாவிகளை விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்க விரும்புகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #ChhattisgarhElections #Rahul #Modi
    Next Story
    ×