என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானாவில் கணக்கில் வராத ரூ.7.5 கோடி பறிமுதல்
Byமாலை மலர்7 Nov 2018 2:43 PM GMT (Updated: 7 Nov 2018 2:43 PM GMT)
தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கணக்கில் வராத 7 கோடியே 51 லட்சம் ரூபாயை ஐதராபாத் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். #unaccountedcash
ஐதராபாத்:
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் கமிஷன் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த பணத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்டப்படாததால் அந்த வீட்டில் இருந்து 7 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் பணத்தை கடத்திவந்த வால்வோ கார், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இப்படி கணக்கில் வராத பணம் சுமார் 53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்துள்ளார். #unaccountedcash #Telanganapolls
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் கமிஷன் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐதராபாத் பகுதிக்குட்பட்ட சைஃபாபாத் போலீசார் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்தின்பேரில் இன்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த பணத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்டப்படாததால் அந்த வீட்டில் இருந்து 7 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் பணத்தை கடத்திவந்த வால்வோ கார், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இப்படி கணக்கில் வராத பணம் சுமார் 53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்துள்ளார். #unaccountedcash #Telanganapolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X