என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயோத்தியில் தீபாவளி கொண்டாடும் தென்கொரியா அதிபரின் மனைவி சுஷ்மாவுடன் சந்திப்பு
Byமாலை மலர்5 Nov 2018 11:57 AM GMT (Updated: 5 Nov 2018 11:57 AM GMT)
அயோத்தியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.
இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.
பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள ஏ.எஸ்.என் பள்ளிக்கு சென்றார். அங்கு உள்ள மாணவ- மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
லக்னோவில் இருந்து நாளை அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார்.
பின்னர், அயோத்தியில் ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா என்பவர் தென் கொரியாவுக்கு சென்று அந்நாட்டு மன்னரை மணந்த பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறார்.
தென்கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.
இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.
பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள ஏ.எஸ்.என் பள்ளிக்கு சென்றார். அங்கு உள்ள மாணவ- மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
இன்று மாலை உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேரும் அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார்.
லக்னோவில் இருந்து நாளை அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார்.
பின்னர், அயோத்தியில் ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா என்பவர் தென் கொரியாவுக்கு சென்று அந்நாட்டு மன்னரை மணந்த பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறார்.
தென்கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X