search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீலா தீட்சித் பற்றி அவதூறு பேச்சு - அவமதிப்பு வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு
    X

    ஷீலா தீட்சித் பற்றி அவதூறு பேச்சு - அவமதிப்பு வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு

    டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் இருந்து டெல்லி முதல் மந்திரிஅரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுவிக்கப்பட்டார். #Delhicourt #Kejriwal #defamationcase #SheilaDikshit
    புதுடெல்லி:

    டெல்லியின் முதல் மந்திரியாக ஷீலா தீட்சித் முன்னர் பதவி வகித்தபோது மின்சார கட்டண உயர்வை எதிர்த்து பரவலாக போராட்டம் நடைபெற்றது.

    அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது அந்நாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தரக்குறைவாக விமர்சித்து அவதூறாக பேசியதாக ஷீலா தீட்சித்தின் உதவியாளரான பவன் கேரா என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.


    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவரை இவ்வழக்கில்  இருந்து விடுவிப்பதாக டெல்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் சமர் விஷால் இன்று அறிவித்துள்ளார். #Delhicourt #Kejriwal  #defamationcase #SheilaDikshit
    Next Story
    ×