search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 155 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
    X

    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 155 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 155 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். 

    மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, டிசம்பர் 11ம் தேதி நடைபெற்று அன்றைய தினமே, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.



    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி  வெளியிட்டுள்ளது. 

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 155 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளோம். அஜய் சிங், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பச்சோரி, முன்னாள் முதல் மந்திரி திக்விஜய் சிங்கின் மகன்ஜெய்வர்தன் சிங் மற்றும் லஷ்மண் சிங் உள்பட பலரும் இந்த பட்டியலில் அடங்குவர் என தெரிவித்துள்ளது. #MadhyaPradeshElections #Congress
    Next Story
    ×