என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரத் பவார், பரூக் அப்துல்லாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு வியூகம்
Byமாலை மலர்1 Nov 2018 10:04 AM GMT (Updated: 1 Nov 2018 10:04 AM GMT)
பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இறங்கி உள்ள சந்திரபாபு நாயுடு, இன்று டெல்லியில் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ChandrababuNaidu #SharadPawar #FarooqAbdullah
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா ஆகியோரை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததாக கூறினார்.
‘நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அனைத்து தலைவர்களையும் அழைத்து சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்’ என்று சரத் பவார் கூறினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். #ChandrababuNaidu #SharadPawar #FarooqAbdullah
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா ஆகியோரை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததாக கூறினார்.
‘நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அனைத்து தலைவர்களையும் அழைத்து சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்’ என்று சரத் பவார் கூறினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். #ChandrababuNaidu #SharadPawar #FarooqAbdullah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X