search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் பவார், பரூக் அப்துல்லாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு வியூகம்
    X

    சரத் பவார், பரூக் அப்துல்லாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு வியூகம்

    பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இறங்கி உள்ள சந்திரபாபு நாயுடு, இன்று டெல்லியில் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ChandrababuNaidu #SharadPawar #FarooqAbdullah
    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு  பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.



    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா ஆகியோரை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை தெரிவித்தார்.

    பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததாக கூறினார்.

    ‘நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அனைத்து தலைவர்களையும் அழைத்து சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்’ என்று சரத் பவார் கூறினார்.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். #ChandrababuNaidu  #SharadPawar #FarooqAbdullah

    Next Story
    ×