என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியை மன்னிக்காதீர்கள் - விவசாயிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா கோரிக்கை
Byமாலை மலர்1 Nov 2018 12:50 AM GMT
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை மன்னித்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார். #YashwantSinha #Modi #Farmers
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் ஜுனாகட் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
குஜராத் மாநில அரசு அனைத்து வழிகளிலும் தோற்றுப்போன அரசு. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தலித்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்ததற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மோடியை மன்னிக்கக் கூடாது. விவசாயிகளுக்காக அவர் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். #YashwantSinha #Modi #Farmers
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X