என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் அக்ஷரலக்ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 100-க்கு 98 மார்க் எடுத்த 96 வயது பாட்டி
Byமாலை மலர்31 Oct 2018 11:27 AM GMT (Updated: 8 Nov 2018 3:27 AM GMT)
கேரள மாநிலத்தில் முதியோருக்கான எழுத்தறிவு இயக்கமான ‘அக்ஷரலக்ஷம்’ தேர்வில் 96 வயது பாட்டியான கார்த்தியானி அம்மா 100-க்கு 98 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். #KarthiyaniAmma #AlappuzhaKarthiyaniAmma #Aksharalaksham
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்ஷரலக்ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது.
இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்வை எழுதியவர்களில் மிகவும் முதியவரான 96 வயது பாட்டி கார்த்தியானி அம்மா 100-க்கு 98 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த கார்த்தியானி அம்மா ‘எந்த முயற்சிக்கும் - எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல’ என்பதை நிரூபித்துள்ளார். #KarthiyaniAmma #AlappuzhaKarthiyaniAmma #Aksharalaksham
கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்ஷரலக்ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது.
இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்வை எழுதியவர்களில் மிகவும் முதியவரான 96 வயது பாட்டி கார்த்தியானி அம்மா 100-க்கு 98 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த கார்த்தியானி அம்மா ‘எந்த முயற்சிக்கும் - எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல’ என்பதை நிரூபித்துள்ளார். #KarthiyaniAmma #AlappuzhaKarthiyaniAmma #Aksharalaksham
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X