search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி
    X

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா நகரில் பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்கி மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

    பலமணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அலாரின் மருமகன் உஸ்மான் ஹைதர் என்பவனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட நவீன ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் அவனது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #JammuKashmir #MillitantGunnedDown
    Next Story
    ×