search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்- சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
    X

    தமிழக முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்- சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

    தமிழக முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதுடெல்லி:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டதும் டெண்டரை ரத்து செய்யாமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு குறித்த புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். மேலும் வழக்கு விசாரணையையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    Next Story
    ×