search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு படை ஏஜெண்டு கைது
    X

    உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு படை ஏஜெண்டு கைது

    உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர். #UttarPradesh #ISIAgent
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம், குர்ஜா நகரை சேர்ந்தவர் ஜாகித். இவர் அங்கு மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டினார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், ரகசியமாக கண்காணித்தனர். அதில் அவர் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் பாகிஸ்தானை சேர்ந்த 19 செல்போன் எண்கள் இடம் பெற்றுள்ளன. அவரிடம் காசியாபாத், மீரட் வரைபடங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. 
    Next Story
    ×