என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் திறக்கப்படாத விமான நிலையத்தில் முதல் பயணியாக இறங்கிய அமித் ஷா
Byமாலை மலர்27 Oct 2018 2:47 PM GMT (Updated: 27 Oct 2018 2:52 PM GMT)
கேரளா மாநிலம், கண்ணூரில் திறக்கப்படாத சர்வதேச விமான நிலையத்தில் முதல் பயணியாக இன்று அமித் ஷா விமானத்தில் வந்திறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmitShah #KannurAirport
திருவனந்தபுரம்:
பா.ஜ.க. தேசிய தலைவர் இன்று கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து வருகை தந்தார்.
வழக்கமாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு பதிலாக கண்ணூர் நகரில் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாத புதிய சர்வதேச விமான நிலையத்தில் அமித் ஷாவின் விமானம் வந்திறங்கியது.
இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்னும் நடைபெறாத நிலையில் அமித் ஷா இங்கு முதல் பயணியாக வந்திறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த கேரள மின்சாரத்துறை மந்திரி மணி, ‘நாட்டில் திறக்கப்படாத விமான நிலையத்தில் ஒரு விமானம் வந்திறங்குவது இதுதான் முதல்முறை’ என்று குறிப்பிட்டுள்ளார். #AmitShah #KannurAirport
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X