என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் வரும் பிரதமர் மோடிக்கு தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் பிரதமர் ஷின்சோ அபே
Byமாலை மலர்25 Oct 2018 8:22 PM GMT (Updated: 27 Oct 2018 8:54 AM GMT)
இருநாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே. #Modi #ShinzoAbe
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 28 மற்று ம் 29ம் தேதிகளில் ஜப்பான் செல்ல உள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.
முதல் நாளான 28-ம் தேதி பிரதமர் மோடி யாமனாஷி நகருக்கு செல்கிறார். அங்கு இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மறுநாள் 29-ம் தேதி டோக்கியோவில் நடக்கும் சந்திப்பில் இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், பிரதமர் ஷின்சோ அபேவும் விவாதிக்க உள்ளனர். அங்குள்ள 'ரோபோ' தயாரிப்பு மையத்துக்கு சென்று, மோடி பார்வையிடுகிறார்.
மேலும், ஜப்பான் செல்லும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அபேயின் தனிப்பட்ட சொகுசு பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.
ஷின்சோ அபே தனது சொகுசு பங்களாவுக்கு வரும்படி வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுப்பதும், விருந்து அளிப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #ShinzoAbe
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X